குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக பேசிவருகின்றனர்.
அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை, அந்தப் பகுதியில் இருந்த நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.
நேற்று காலை அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையை பாடசாலை மாணவர் கடக்க முயன்ற போது பொல்கஹவெலவில் இருந்து வந்த ரயில் குறுக்கு வீதியை அண்மித்துள்ளது.
இதன் போது மாணவன் ரயிலில் மோதப்போகிறார் என அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்ட போதிலும் ரயில் சத்தம் காரணமாக அவருக்கு கேட்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த தெரு நாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடிவந்து மாணவன் மீது பாய்ந்துள்ளது. இதன் போது நிலைமையை உணர்ந்த மாணவன் ரயில் கடவையை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.
ஒரு நொடி தாமதமாகியிருந்தால் இளைஞனும் நாயும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருப்பார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் குறித்த மாணவனுக்கு எரிபொருள் பிரச்சினையால் வாகனம் ஒன்று கிடைக்காமையினால் ரயில் வீதியில் பயணித்து பரீட்சை மண்டபத்தை சென்றடைய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ,
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது