More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
May 25
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்திலேயே ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   



சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் பயணித்துக்கொணடிருந்த போது டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.



இந்நிலையில் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவேளை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இன்றைய தினம் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.   



திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வண்டியும் களனி நோக்கி பயணித்த கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.



சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பேருந்து வண்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த கனரகவாகனம் மோதியதால் விபத்து நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.



காயமடைந்த அறுவரில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர

Feb14

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண

Apr15

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி

Mar05

பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா

Mar23

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக

Mar03

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற

Mar14

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந

Oct20

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ

Jul16

நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர

Jun30

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த

Feb04

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந

May13

நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு

Apr06

அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (05:07 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (05:07 am )
Testing centres