13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை ஒரு தரப்பு சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டாலும் மற்றுமொரு தரப்பு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த போர் வெற்றி கொண்டாட்டத்திற்கு பணத்தை செலவிட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கி வருகின்றது.

சமூக ஊடங்களில் அரசாங்கத்தின் போர் வெற்றி கொண்டாட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்டு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக ராஜபக்சர்கள் மீது சிங்களவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
அதன் விளைவாக இந்த பதிவுகள் பகிரப்படலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, இந்த நிகழ்வை நினைவு கூர்ந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், யுத்தம் ஒருபோதும் ஒரு வெற்றியாக இருக்க முடியாது, மாறாக ஒரு நாட்டிற்கு அல்லது மனித குலத்துக்கான தோல்வியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
மன்னார் க
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
