நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் தீர்மானமானது பிராந்தியத்தின் இராணுவ மயமாக்கலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது எல்லைக்கு அருகில் நேட்டோ ஆயுதங்களை நிலைநிறுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் இன்று மாலை நடைபெறவுள்ள நேட்டோ வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் பார்வையாளர்காக கலந்து கொள்ளவுள்ளன.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நேட்டோவில் இணைவது குறித்து இரு நாடுகளும் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் மேற்குலக நாடுகளின் இராணுவ கூட்டணியில் அங்கம் வகிக்காத பட்சத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையிலேயே இரு நாடுகளும் நேட்டோவில் இணைந்து கொள்வதை அச்சுறுத்தலாக நோக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனின் கார்கிவ் நகரிலிருந்து தமது படைகளை திரும்ப பெறுவதில் ரஷ்யா கவனம் செலுத்தியுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங
துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக
