More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!
மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!
May 14
மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!

கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான, தமிழ்நாடு- ராமநாதபுரத்தை சேர்ந்த சீனி அபுல்கான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைமறைவாகியுள்ளார்.





இந்தநிலையில் அபுல்கான், தமக்கு நிவாரணம் கோரி முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.



மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!



 



தமது கட்சிக்காரர், அகதிகள் என்று நம்பியே இலங்கையர்களை வரவழைத்ததாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டார்.



இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இலங்கை அகதிகள் இந்தியாவிற்கு வருவது தற்போது சர்வசாதாரணமாக உள்ளது.





மேலும் அங்கிருந்து அகதிகளை ஏற்று அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதில் இந்திய அரசாங்கம் தாராளமாக உள்ளது என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.



எனினும்,அபுல்கான், பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். மங்களூருவில் இருந்த இலங்கையர்கள்; தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்.





அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த எதிர்கால வாய்ப்புகளுக்காக கனடாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார் என்று அரச தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.



மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!



மனுதாரராக அபுல்கான் தலைமறைவாகி, ஆரம்பத்திலிருந்தே விசாரணையின் செயல்முறையைத் தவிர்க்கிறார் என்றும் அரச தரப்பு மன்றில் சுட்டிக்காட்டியது.



இதனையடுத்து நீதிபதி கசனப்ப நாயக் முன்பிணை மனுவை நிராகரித்தார் மனுதாரர் குற்றத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார் என்பதையும், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். 



மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய

Oct11
Apr05

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண

Jan31

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்

Aug19

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி

Jul17

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே

Mar29

தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா

Feb19

ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த

Mar23

பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத

Oct13
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (19:02 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (19:02 pm )
Testing centres