கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் மீதான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், பதினைந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது.
இதன்போது குறித்த 12 இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பத்திரம் இன்றையதினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை, இழுவைமடி வலைகளை உடைமையில் வைத்திருந்தமை, இழுவை மடி வலைகளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இதில் முதலாவது குற்றச்சாட்டுக்கு 15 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையும், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படகு உரிமம் தொடர்பிலான விளக்கத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது. இதே நேரம் வழமை போன்று இன்றையதினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றிற்கு சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம
தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்
ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண
தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
