வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த நாட்டில் தீவிர அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நாடு முழுமையாக பூட்டப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியாக கொரோனா பாரிய அழிவுகளை ஏற்படுத்தியபோதும், அணு ஆயுதம் கொண்ட வடகொரியா, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதாக அறிவிக்கவில்லை.
ஏனைய நாடுகளில் 2020 இல் தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து வடகொரிய அரசாங்கம் அதன் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தநிலையில் தற்போது தலைநகர் பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், கொரோனாவுடன் ஒத்துப்போவதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே ஜனாதிபதி கிம் ஜோங் உன் உட்பட உயர் அதிகாரிகள் இன்று நெருக்கடி நிலையை அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வழங்கப்படவில்லை.
இதேவேளை ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மற்றும் ரஷ்யா வழங்கும் தடுப்பூசிகளை வட கொரியா நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப
உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்ப
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந் உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ
