தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன்பாஸ்சில் நிலைகொண்டுள்ள படையினரும் தன்னார்வலர்களும் போராடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரஷ்யா மீதான படையெடுப்புக்கு மேற்குலக நாடுகள் தயாராகி வருவதாக ரஷ்ய அதிபர் குற்றஞ்சாட்டியு்ளளார்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் நாசி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றிவிழா அணிவகுப்பு சிவப்பு சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த வெற்றிவிழாவில் உரையாற்றிய விளாடிமீர் புடின், நேட்டோ இராணுவ கூட்டணி, ரஷ்யாவிற்கு வெளிப்படையான அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை அவசியமானது எனவும் படை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் சரியானது எனவும் விளாடிமீர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் யுத்தத்தால் துன்பப்படும் குடும்பங்களுக்கு தமது அரசாங்கம் அனைத்தையும் மேற்கொள்ளும் என ரஷ்ய அதிபர் உறுதி அளித்துள்ளார்.
ஒவ்வொரு இராணுவ வீரர் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் வேதனை அளிக்கின்றது எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் இருந்த வீரர்களின் ஆரவாரம் மற்றும் ரஷ்ய தேசிய கீதத்துடன் விளாடிமீர் புடின் தனது உரையை நிறைவுசெய்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்ட
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
உக்ரைனுக்கு எதிராக போரிட்டுவரும் ரஷ்யாவுக்கு எந்தவி
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள்
