பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்று பாட்டு பாடி காசு வாங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஃபரா கானின் தி கத்ரா கத்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியை பார்தி சிங் தொகுத்து வழங்குகிறார்.
பார்தியுடன் சேர்ந்து சாலையில் காசு வாங்கிவிட்டு வரும் டாஸ்கை சாராவுக்கு ஃபரா கான் கொடுத்தார் .
இதையடுத்து பார்தி சிங்குடன் தெருவுக்கு வந்த சாகா அலி கான், காசு கொடுத்தால் என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து இரண்டு பேர் வந்து 20 ரூபாய் கொடுக்க சாரா அலி கான் அதை வாங்க மறுத்துவிட்டார்.
பின்னர் ரிக்ஷா ஓட்டிச் சென்றவரை நிறுத்தி பணம் கேட்க, என்கிட்ட ஏது மேடம் பணம் என்று அவர் சாராவிடம் கூறியுள்ளார்.
இறுதியில் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து சாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தார். மற்றொருவரோ 500 ரூபாய் கொடுத்து சாராவை பாட்டு பாடச் சொன்னார்.
அவரும் காசை வாங்கிக் கொண்டு பாட்டு பாடினார். மேலும் சாரா அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றார்.
இதேவேளை, சாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அத்ரங்கி ரே. ஆனந்த் எல். ராய் இயக்கிய அந்த படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் சாரா என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச
தமிழ் சினிமா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
