ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்கடலில் போர்க்கப்பலின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா பகிர்ந்து கொண்ட உளவுத்துறை இரகசியங்கள் உதவிகரமாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி கருங்கடலில் உள்ள ரஷ்யக் போர்க்கப்பலைக் குறிவைத்து தாக்கும் முடிவு உக்ரைனின் தனிப்பட்ட முடிவு எனவும், இருப்பினும் கப்பல்களின் இருப்பிடங்கள் உட்பட பலவிதமான உளவுத்துறையை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாகவும் என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போரில், கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்திய மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பல் கடந்த மாதம் 13 ஆம் திகதி தீப்பிடித்து பின்னர் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து கப்பல் தீப்பற்றியதாக ரஷ்யா கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலில் 510 மாலுமிகள் இருந்ததாகவும், மோஸ்க்வா கப்பல் தீயில் சிக்கி அதன் சிப்பந்தி ஒருவர் பலியாகி விட்டதாகவும், 27 பேர் காணாமல் போய் இருப்பதாகவும், 396 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப
பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில்
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத
ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத
அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
