More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்
உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்
May 08
உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்களா? என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை என்று ஆலைக்குள் சிக்குண்டிருக்கும் உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.



மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர்.



இன்றும் ரஷ்யப் படைகள் தொடர்ந்து இரும்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அவர்கள் ஆலையைத் தகர்க்க முயல்வதாகவும் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படையதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு



ரஷ்யாவின் முற்றுகைக்குள் இருக்கும் உக்ரைன் மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இன்று இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.



இதன்போது அவர்களின் மீட்புக்கான வேண்டுகோள் விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த இரும்பு ஆலையின் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் தங்குமிடங்களில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



பொதுமக்கள் வெளியேறியதை அடுத்து, அந்த தளத்தில் ரஷ்யா தனது தாக்குதல்களை முடுக்கிவிடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.



ஆலைக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான உக்ரைனிய படையினர் தங்கள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.



எனினும் சரணடையப் போவதில்லை என்று ஆலைக்குள் உள்ள உக்ரைன் படையினர் தெரிவித்து வருகின்றனர்.



இந்தநிலையில் இணையவழி செய்தியாளர் சந்திப்பில், அசோவ் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் ரேடிஸ் ப்ரோகோபென்கோ மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் செய்தியாளர்களுடன் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக

Mar25

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது

Jul04

பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ

May13

சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு

Jun14

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி

Jan13

இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால்

Mar11

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள்

May18

பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வ

May19

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்

Jul20

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல

Mar04

ரஷ்ய அதிபர் புடின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டு

Mar29

ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய

Jan30

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட

Mar27

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்

Mar11

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 20 (00:05 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 20 (00:05 am )
Testing centres