நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்களில் வெள்ளரிப் பழ வியாபாரிகளால் விற்பனை களை கட்டியுள்ளது.
வரட்சியான காலநிலை நிவுவதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப் பழ கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அத்துடன், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளரிப்பழங்கள் பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
