ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் நடத்திய எறிகனை தாக்குதல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தாக்குதல் பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
இதேவேளை தலைநகர் கியேவின் மேற்கே உள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரல், இன்று அதிகாலையில் அணைக்கப்பட்டது.
கிழக்கு நகரமான சுமியில், ரஸ்யாவின் வான்வழி குண்டு தாக்குதல்களால், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை எரியுண்டது.
இதன்போது இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு பெண் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தெற்கில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில், ரஷ்ய எறிகனை தாக்குதல்களால் ஒன்பது மாடிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தின் 27 அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்தன.
இதன்போது குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு
ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தட
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
