உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் உக்ரைன் நாடு நிலைகுலைந்துள்ளது.
அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் நாட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கி தவித்தனர்.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவம் படிக்க மாணவர்கள் சென்ற நிலையில் போர் பதற்றம் காரணமாக மாணவர்களை மீட்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு மாணவர்களின் பயண செலவை தமிழக அரசு ஏற்கும் என்றார். மேலும் இந்திய அரசு மாணவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மத்திய அரசு ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.
இதனிடையே உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் அவர்களது அனுபவம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம
100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா