உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்கின்றது.
உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உக்ரைன் -ரஷ்யா இடையேயான பேச்சில் பங்கேற்ற அதிகாரி படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 28 ஆம் திகதி மற்றும் கடந்த 3ஆம் திகதி என 2 கட்டங்களாக இரு நாடுகளுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில்,3வது கட்ட பேச்சுவார்த்தை வரும் திங்கள் கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ரஷ்யாவுடனான சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
டெனிஸ் கிரீவ் என்கிற அந்த அதிகாரி தலைநகர் கீவில் குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னணி இப்போது தெரியவந்துள்ளது. இவர் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதால் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் டுபின்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
டெனிஸ் கிரீவின் தேசத்துரோகம் குறித்து உக்ரைனின் பாதுகாப்பு சேவை அமைப்புக்கு தெளிவான தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும் மற்றொரு எம்.பி.யான ஒலெக்சி ஹோன்சரெங்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்
கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும்
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினம்
