ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்ரைய்னியர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போர் பகுப்பாய்வின்படி, உக்ரேனிய இராணுவம், ரஸ்ய இராணுவத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறிய அளவானது.
இந்தநிலையிலேயே, 66,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆண்கள் நாட்டிற்காக போராடும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ளனர் என்று உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ஒலெஸ்கி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார்
இதில் கடந்த ஆண்டு செம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக மோல்டோவாவின் ஷெரிப் டிராஸ்போல் அணியை அதிர்ச்சிகரமான வெற்றிக்கு அழைத்துச் சென்ற 56 வயதான கால்பந்து பயிற்சியாளர் யூரி வெர்னிடுப்டும் ஒருவராவார்.
உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச் சென்றவர்களையும் ரஸ்ய படையினர் தாக்கிய சம்பவம் ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
சண்டை தீவிரமடைந்து வந்தபோது ஒரு தந்தையும் மகனும் உக்ரைய்னில் இருந்து வெளியேற முயன்றனர்.
எனினும் புட்டினின் படையினர் எவ்வித எச்சரிக்கையும் இன்றி அவர்களது வாகனத்தை நோக்கி கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன்போது தந்தை இறந்துவிட்டார் அவரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை என்று மகன் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது
ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
