உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் ரஷ்ய படைகள் இன்னும் முன்னேறி வருவதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களை விட கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
எனினும் ரஷ்யப் படைகள் தெற்கு துறைமுக நகரமான மைகோலாய்வை நோக்கி முன்னேறி வருவதாக எச்சரித்துள்ளது.
கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை உக்ரைன் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அதே நேரத்தில் வடகிழக்கு நகரமான சுமியில் சண்டை இடம்பெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
நான்கு நகரங்களும் ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
இதேவேளை பல நாட்களாக ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோலில் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை அடுத்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, நகரின் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும், மேலும் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க
ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள்
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதி
உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம
நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய
தென் ஆப்பிரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கொரோன
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
