உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் ரஷ்ய படைகள் இன்னும் முன்னேறி வருவதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களை விட கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
எனினும் ரஷ்யப் படைகள் தெற்கு துறைமுக நகரமான மைகோலாய்வை நோக்கி முன்னேறி வருவதாக எச்சரித்துள்ளது.
கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை உக்ரைன் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அதே நேரத்தில் வடகிழக்கு நகரமான சுமியில் சண்டை இடம்பெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
நான்கு நகரங்களும் ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
இதேவேளை பல நாட்களாக ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோலில் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை அடுத்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, நகரின் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும், மேலும் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு
வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத
உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ர
அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள
ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
