வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேற்று முன்தினம் பிற்பகல் வாத்துவ பிரதேசத்தில் கடை ஒன்றின் மீது மோதியதில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குரோஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நீர்கொழும்பில் தங்கியிருந்த தம்பதியினர் காலிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த முச்சக்கரவண்டி பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்துள்ளது.
பொஹத்தரமுல்ல தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள எதிர் பாதையில் குறித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகிச் சென்று கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், செங்கல் குவியலை இடித்து, கடையின் வாயிலை சேதப்படுத்தியது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் கடைக்கு 20,000 ரூபாய்க்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இதன்படி கடை உரிமையாளரின் தயவில் இரு தரப்பினரும் உடன்படிக்கை செய்து வெளிநாட்டு தம்பதியினரின் வசமிருந்த 12,000 ரூபா நட்டத்தை செலுத்தியதையடுத்து, பொலிஸ் முறைப்பாடு எதுவுமின்றி தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.
குறித்த விபத்தின் போது வெளிநாட்டு பெண்ணால் முச்சக்கரவண்டி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் த
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
