இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி பாணந்துறை பிரதேசத்தில் பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் பெற்ற நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரொருவர் பாணந்துறையில் பணம் வசூலிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர் கனடாவில் வேலை பெறுவதற்கான ஒப்பந்தத்திற்காக சட்டத்தரணியுடன் வருமாறும், வரும் போது 5 லட்சம் ரூபாய் பணமும் கொண்டுவர வேண்டும் எனவும் அவரிடம் வரும் இளைஞர் யுவதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய விசாரணை அதிகாரி ஒருவர் சட்டத்தரணி போன்று நடித்து சந்தேக நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 50 மில்லியன் ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க
