உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை முதல் முறையாக ரஷ்யா வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக அச்சப்படுகிறது.
இதேவேளை, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை ரஷ்யா நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் கொல்லப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போரில் 1,597 வீரர்கள் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போரில் உக்ரைன் வீரர்கள் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவுடனான மோதலில் தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம்
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங்
குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
