உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை முதல் முறையாக ரஷ்யா வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக அச்சப்படுகிறது.
இதேவேளை, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை ரஷ்யா நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் கொல்லப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போரில் 1,597 வீரர்கள் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போரில் உக்ரைன் வீரர்கள் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவுடனான மோதலில் தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு
கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ம
