நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என தூய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சிரேஷ்ட அரசாங்கப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
"எந்த ராஜபக்ச மன்னராக இருந்தாலும் இறுதியில் பசில் ராஜபக்சே நாட்டை ஆளுவார். இந்த நெருக்கடிக்கு தீர்வாக 22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்போம்."
"அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 70.1 எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று கூறுகிறது."
"நாடாளுமன்றத்தில் திடமான கோரம் 20 உள்ளது. 20 பேர் அமர்ந்து 11 பேர் விருப்பப்பட்டாலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்." எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விரைவில் நாட்டின் "எதிர்கால தலைவரைபார்க்கலாம். பொறுமையாக இருங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறி
கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய ச
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற