உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா தெரிவித்துள்ளார்.
உலகநாடுகளின் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவப்படைகளை அழித்து, அவர்களின் ராணுவ வீரர்களை தொடர்ந்து மாறிமாறி கைது செய்து வருகின்றனர்.
இதனிடையே உக்ரைன் ராணுவத்தின் வசம் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் வாக்குமூலம் வழங்குவது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உக்ரைன் அரசு தொடர்ந்து வெளியீட்டு வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட உக்ரைன் ராணுவ வீரர்களின்குறித்த எந்தவொரு தகவலும் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்தநிலையில், சர்வதேச செஞ்சுலுவை சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட 500 உக்ரைன் நாட்டு போர் கைதிகளை பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
மேலும் போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ளவும் மாஸ்கோ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து, பேசியுள்ள ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா உக்ரைனில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ரஷ்யா ராணுவ வீரர்களுக்கு மாற்றாக உக்ரைனின் வீரர்களை பரிமாறி கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். 

கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்
ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வ
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப
உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று
