உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில்-ரஷ்யா 26 நாள்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய ராணுவம் முழு மூச்சியில் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடைந்து இருப்பினும், இதுவரை போரை நிறுத்துவது குறித்த எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை, இதனைதொடர்ந்து இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவங்களை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி மாறிமாறி எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்-வில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் குறித்த cctv வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1505839896426074113
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
சீன அரசானது நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்கான &nbs
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா
அமேசான் நிறுவனர்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவி உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ
