More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்று திறனாளியான சிறுமி
பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்று திறனாளியான சிறுமி
Mar 21
பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்று திறனாளியான சிறுமி

மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர் இன்று (20) தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 13 மணி 10 நிமிட நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.



மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரியும் மதன் ராய். அவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய் (வயது-13).



குறித்த சிறுமி ஜியாராய் ஆட்டிசம் ஸ்பெக்டரம் பாதிப்பிற்குள்ளானவர்.மேலும் இச் சிறுமி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.



இவர் மும்பை கடற்படை பள்ளியில் படிக்கிறார். 2021 ஆம் ஆண்டு மும்பை கடலில் 36 கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்தார்.



இவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பாராட்டினார்.



இந்த நிலையில் இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை 29 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.



இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து இன்று (20) அதிகாலை 4.22 மணிக்கு மும்பையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி நீந்த ஆரம்பித்தார்



மதியம் 02.10 மணியளவில் இலங்கை- இந்திய சர்வதேச எல்லையை குறித்த சிறுமி வந்தடைந்தார். மாலை 5.32 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தார்.



குறித்த மாற்றுத்திறனாளி சிறுமி சுமார் 13 மணிநேரம் 10 நிமிடத்தில் கடந்துள்ளார். கடலில் நீந்தி வந்த சிறுமியை தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சிறுமியை வாழ்த்தினார்.



மேலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஜியாராய் ஒரு எடுத்துக்காட்டு. கடலில் உள்ள பல சவால்களை கடந்து சிறுமி சாதனை படைத்துள்ளதாக சைலேந்திர பாபு சிறுமியை பாராட்டினார்.



இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடல் பகுதியில் மெரைன் பொலிஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பலும் பாதுகாப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தன

Feb02

இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம

Feb24

பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.

Mar09

வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற

Feb11

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்

Feb23

43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ

Mar29

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை

Mar08

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு

Feb04

இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ

Feb12

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை

May16

தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்

Mar08

இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா

Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

Mar03

தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ

Feb15

விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (05:25 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (05:25 am )
Testing centres