இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.
மாபொல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 70 வயதுடைய நபரே கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
இதன்போது உயிரிழந்தவரின் மனைவியை பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த நிலையில், அவர் தனது கணவர் உயிரிழந்துள்ளமையை நம்பாது சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்த தன் கணவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும்,"அவருக்கு சர்க்கரை நோய், நெஞ்சுவலி. மருந்து சாப்பிடுகிறார்.ஒன்றுமில்லை என்றும் அங்கிருந்த அனைவரிடமும் கூறியுள்ளார்.
பின்னர் பொலிஸாரின் உதவியுடன் உயிரிழந்த கணவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
உயிரிழந்த கணவனை முச்சக்கர வண்டியில் ஏற்றி அவ்வப்போது உடலை அசைத்து சுயநினைவு பெற முயலும் காட்சி கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,காண்போரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினமும் (19) கண்டி, யட்டிநுவர வீதியில் மண்ணெண்ணெய் வரிசையில் நின்றிருந்த 71 வயதுடைய நபரொருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க
முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
