கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (17-03-2022) கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலையில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுப்பட்டிருந்த போதிலும், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸாரினால் அச்சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இன்று காலையிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்தவர்கள் மத்தியிலும் பலமுறை குழப்பம் ஏற்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், காலை 8.00 மணியில் இருந்து மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது மண்ணெண்ணெய் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலையில் இருந்து வரிசையில் காத்திருந்த மக்களால் எரிபொருள் நிலையம் முற்கையிடப்பட்டு்ள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில் அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்துவருகின்றனர்.

மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெள
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
