இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பட்டிப்பளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அஹமட் மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்ற சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.
எல்ல புகையிரத நிலையத்திற்கு உடரட மெனிகே ரயிலில் பயணித்த அவர், நேற்று (16) பட்டிப்பொல புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருடன் வந்திருந்த அவரது நண்பர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
குறித்த எகிப்திய பிரஜை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம