போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், உக்ரைன் விடயத்தில் தமது கோரிக்கைகள் என்ன என்பதை ரஸ்யா, துருக்கியிடம் விளக்கியுள்ளது.
ரஸ்ய ஜனாதிபதி புடின், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப்பிடம் இதனை விளக்கியுள்ளார் உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் மற்றும் நேட்டோவில் சேர விண்ணப்பிக்கக் கூடாது என்பது இதில் முதலாவது கோரிக்கையாகும்.
இதனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கைக்கு ரஸ்யாவின் துல்லியமான கோரிக்கைகளாக இவை அமையும் என்று புடின், துருக்கியின் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய கோரிக்கைகள் ரஸ்ய தரப்பின் கௌரவத்தை காப்பாற்றும் கோரிக்கைகளாக அமைந்துள்ளன.
ரஸ்யாவிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுதக் குறைப்பு செயல்முறையை உக்ரைன் மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் உக்ரைனில் ரஸ்ய மொழிக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் புடின் கோரியுள்ளார்
இதேவேளை இந்த விடயங்களில் உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பு தனக்கும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் தேவை என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸின் நிலையைப் பற்றி புடின், உக்ரைனில் இருந்து ஏற்கனவே பிரிந்து சென்ற கிரிமியாவின் நிலையை வலியுறுத்தியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம்
இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
