More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நரபலி கொடுப்பதற்கு சிறுமி கடத்தல்- டெல்லியில் 2 பேர் கைது
நரபலி கொடுப்பதற்கு சிறுமி கடத்தல்- டெல்லியில் 2 பேர் கைது
Mar 16
நரபலி கொடுப்பதற்கு சிறுமி கடத்தல்- டெல்லியில் 2 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 13-ந்தேதி திடீரென மாயமானார்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.



போலீசார் மாயமான சிறுமியை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.



இந்தநிலையில் டெல்லி பாக்பத் பகுதியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.



போலீஸ் விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சோனு பால்மிகி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், கூட்டாளி நீது என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.



விசாரணையில் நரபலி கொடுப்பதற்காக சிறுமியை கடத்தி சென்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதான சோனு பால்மிகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை.



திருமணத்துக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டதால் சதேந்திரா என்கிற மந்திரவாதியை சந்தித்து தனது திருமண தடங்கல் பற்றி கூறினார். அப்போது மந்திரவாதி அவரிடம் ஹோலி பண்டிகையன்று நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என யோசனை தெரிவித்தார்.



இதுபற்றி அவர் தனது நண்பரான நீதுவிடம் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தனர்.



சம்பவத்தன்று அவர்கள் சிறுமியிடம் நைசாக பேசி கடத்தி சென்றனர். டெல்லியில் உள்ள பாக்பத் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி வீட்டுக்கு அந்த சிறுமியை சோனு பால்மிகி கொண்டு சென்று அடைத்து வைத்தார்.





சிறுமியை அங்கு வைத்து அவர்கள் நரபலி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். அதற்குள் போலீசார் சிறுமியை மீட்டதால் நரபலி கொடுக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மந்திரவாதி சதேந்திரா உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.



துரிதமாக செயல்பட்டு சிறுமியை மீட்ட போலீசாருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் கமி‌ஷனர் அசோக்சிங் தெரிவித்துள்ளார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul26

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம்

Jan26

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர

Sep13

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக

Aug08

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு

Jul24

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செ

Aug01

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற

Sep27

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க

Mar27

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற

Jul21

மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா

Mar05

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம

Jun09

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ

Jan17

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை

Apr30

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு

Apr24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப

Apr19

 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 01 (23:07 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 01 (23:07 pm )
Testing centres