ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
ரஷ்யா தனது தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஏவுகணைகள் மூலம் அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரங்களில் ரஷ்யா பல முறை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் தற்போது முக்கிய தொழிற்சாலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்ய படைகள் அழித்தன. கார்கிவ் நகரில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளதுடன், இரண்டு தடவை மிக சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டுள்ளதுடன்,இன்று அதிகாலையும் தலைநகர் கீவ்வில் 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு பல நாடுகள் மறைமுகமாக பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொடுத்து வருகின்றன. இதுவரை சுமார் 20 ஆயிரம் ஆயுதங்களை உக்ரைன் வெளிநாடுகளில் இருந்து பெற்று எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
குறிப்பாக சிறிய ரக ஏவுகணைகள் மூலம் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த சிறிய ரக ஏவுகணைகள் ரஷ்ய படைகளை அதிகளவு அழித்துள்ளதுடன், இதனால் ரஷ்யா படைகள் திணறி வருவதாக சர்வதேச போர் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்த
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக
இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது
மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக
ரஷ்யா
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
