எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற்றை இன்று அனுபவிக்க முடியாமல் போய்விட்டது என யாழில் டெங்கு காய்ச்சலால் உயரிழந்த மாணவனின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் டெங்கு நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியான நிலையில் குறித்த 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
யாழ். மாவட்ட வெட்டப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்த தினத்தன்று அவர் பரீட்சையில் சித்தியடைவார் என அவரது ஆசிரியர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது மகன் மிக சிரமம் எடுத்து படித்தும், சித்தியடைந்தும் அந்த சந்தோசத்தை அனுபவிக்க எனது மகன் உயிருடன் இல்லை என அவரது தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். எனது மகனுக்கு கடவுள் இப்படி ஒரு நோயை கொடுத்துவிட்டார்.
டெங்குவினால் எனது மகன் உயிரிழந்தமையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களோடு இருக்கவிடாமல் என் பிள்ளையை கடவுள் பிரித்துவிட்டார். மொத்த குடும்பமும் வேதனையில் இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
