யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்டுவ பகுதியில் 60 வயது தமிழ் பெண்ணிற்கு பேஸ்புக்கில் காதல் வலை விரித்து, பெருமளவு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் பொலிசார் சந்தேகநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசிப்பதாக கூறி, பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமாகினார். இளைஞனாக அறிமுகப்படுத்திய அந்நபர், மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக ‘சோகக்கதையை’ அவிழ்த்து விட்டதுடன் காதல் முன்மொழிவையும் வைத்த நிலையில் மூதாட்டியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து பரிசுப்பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டு, அதற்காக செலுத்த பணம் கடன் தருமாறு இளைஞன் கேட்டதற்கிணங்க, அவர் வழங்கிய வங்கி இலக்கத்திற்கு பணம் வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர், வேறு காரணங்களை குறிப்பிட்டும் பணம் கேட்க, காதல் மயக்கத்தில் அந்த பணங்களையும் மூதாட்டி வைப்பிலிட்டு விட்டார். இவ்வறு 3.5 இலட்சம் ரூபா பணத்தை காதலனுக்காக வைப்பிட்ட பின்னர் காதலன் அல்வா கொடுத்து விட்டார்.
இதனையடுத்து காதலனின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் சந்தேகரபரை தீவிரமாக தேடிவருவதாக கூறப்படுகின்றது.
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ