யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்டுவ பகுதியில் 60 வயது தமிழ் பெண்ணிற்கு பேஸ்புக்கில் காதல் வலை விரித்து, பெருமளவு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் பொலிசார் சந்தேகநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசிப்பதாக கூறி, பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமாகினார். இளைஞனாக அறிமுகப்படுத்திய அந்நபர், மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக ‘சோகக்கதையை’ அவிழ்த்து விட்டதுடன் காதல் முன்மொழிவையும் வைத்த நிலையில் மூதாட்டியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து பரிசுப்பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டு, அதற்காக செலுத்த பணம் கடன் தருமாறு இளைஞன் கேட்டதற்கிணங்க, அவர் வழங்கிய வங்கி இலக்கத்திற்கு பணம் வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர், வேறு காரணங்களை குறிப்பிட்டும் பணம் கேட்க, காதல் மயக்கத்தில் அந்த பணங்களையும் மூதாட்டி வைப்பிலிட்டு விட்டார். இவ்வறு 3.5 இலட்சம் ரூபா பணத்தை காதலனுக்காக வைப்பிட்ட பின்னர் காதலன் அல்வா கொடுத்து விட்டார்.
இதனையடுத்து காதலனின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் சந்தேகரபரை தீவிரமாக தேடிவருவதாக கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்க
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உ
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
