இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான சுற்றுநிருபம், சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு மாணவர்கள் இதுவரை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட்டதுடன், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகள் 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முதல் சகல மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் பாடசாலைகளில் கொவிட்-19 தொற்று பரவல் ஏற்படும் சந்தர்ப்பத்தில், வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
இலங்கையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத