சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளன. இதற்கமைய சுமார் 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து தற்போது 1,850 தொடக்கம் 1,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்குள் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கமைய 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்று 1,040 ரூபாவுக்கும், 12 மில்லிமீற்றர் கம்பி 1,500 ரூபாவுக்கும், 16 மில்லிமீற்றர் கம்பி ஒன்று 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு எதிர்காலத்தில் குறித்த கம்பிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்க
இன்று இரவிலிருந்து தற்போது நிலவும் வரட்சியான வானிலைய
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
