உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவுள்ள போர் ரஷ்யாவின் “புதிய ஸ்டாலின்கிராட்” ஆக இருக்கலாம் என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இளைய நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்வியாடோஸ்லாவ் யூரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கீவ் நகரின் புறநகர்ப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் ரஷ்ய படைகள் நகரத்தை நோக்கி முன்னேறினால், அது பாரிய இழப்புகளுக்கு தயாராக வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கீவ் என்பது மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு பெரிய நகரம், ரஷ்யர்கள் உள்ளே வர முயற்சித்தால் அவர்கள் கைகளில் சண்டையிடுவார்கள் - ரஸ்யர்கள் அதை உருவாக்க விரும்பினால், இது அவர்களின் ஸ்டாலின்கிராட் ஆக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1942-43 ஆம் ஆண்டின் இரண்டாவது உலகப் போரின் இரத்தக்களரி போரையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோவியத் ரஸ்யாவின் ஸ்டாலின்கிராட் என்ற இடத்தை கைப்பற்றுவதற்காக இடம்பெற்ற போரின்போது 11 லட்சம் சோவியத் துருப்புக்கள் மற்றும் 800,000 நாஸி ஜெர்மன் மற்றும் ரோமானிய படையினர் மரணித்தனர்.
இந்த போரில் சோவியத் ரஸ்யா இறுதியில் வெற்றிப்பெற்றது.எனவே உக்ரைன் தலைநகர் கீவ் போரின் போது எவரும் சரணடையப் போவதில்லை - இதற்கு நிச்சயமாக உத்தரவாதம் அளிக்க முடியும் என்று ஸ்வியாடோஸ்லாவ் யூரா குறிப்பிட்டுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல்
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளி
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு ந
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்
ரஷ்ய அதிபர் புடின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டு
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்ல
உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷி
இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவ
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு
