உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொடர்ந்து வரும் நிலையில், போருக்கு பின்னர் ரஷியா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என ரஷிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சிலர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். இதன்போது பேசிய ஒரு ரஷிய இராணுவ வீரர்,போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக கொல்லப்படுவோம் என அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட நாள் முதல், தாங்கள் இறந்ததாகவே கருதப்படுவதாகவும், சமீபத்தில் பெற்றோரை தொடர்புகொண்ட போது, எங்களுடைய இறுதிச்சடங்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் கூறியதாகவும் அந்த வீரர் தெரிவித்தார்.
போருக்கு பின்னர் சரணடைந்துள்ள வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் , அவ்வாறு நேர்ந்தால் சொந்த இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது உறுதி என அந்த வீரர் தெரிவித்தார்.
இதேவேளை , ரஷிய துருப்புகளிடம் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு உக்ரேனிய இளம்பெண்ணை பாதுகாக்க முயன்ற ரஷிய அதிகாரி ஒருவர் சக வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
உக்ரைன் மீதான போரில் இதுவரை ரஷிய தரப்பில் 12,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. எனினும் 498 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவி
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்
