உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்புகள் நெருங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 மைல்கள் தொலைவில் ரஷ்ய இராணுவ டாங்கிகளும், இராணுவத்தினரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு துவங்கி இரண்டு வாரங்களுக்கு பின்னர், ரஷ்ய துருப்புகள் தலைநகர் கிவ்வை நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
பல எண்ணிக்கையிலான டாங்கிகள் மற்றும் 20கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் மெதுவாக குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நெருங்குவதாக வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது.
தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் பகுதியில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை மீது கொடூர தாக்குதலை ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்து, போர்குற்றம் புரிந்துள்ள நிலையில், தற்போது இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகள் முன்னேறிவரும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகரின் மத்திய பகுதியில் இருந்து வெறும் 13 மைல்கள் தொலைவிலேயே இர்பின் நகரம் அமைந்துள்ளது. இதனால் இன்னொரு பலமான தாக்குதல் நடவடிக்கை இருதரப்பில் இருந்தும் முன்னெடுக்கபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தலைநகர் கிவ்வை கைப்பற்றும் அளவுக்கான எண்ணிக்கை தற்போது இர்பின் நகரில் காணப்பட்ட ரஷ்ய துருப்புகளிடம் இல்லை என்பதும், இவர்கள் உக்ரைன் துருப்புகளால் மிக விரைவில் முறியடிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைர
ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒ
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
