More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புதுமண தம்பதிக்கு காத்திருந்த பெரும் ஆபத்து - கணவன் பலி - உயிருக்கு போராடும் மனைவி
புதுமண தம்பதிக்கு காத்திருந்த பெரும் ஆபத்து - கணவன் பலி - உயிருக்கு போராடும் மனைவி
Mar 11
புதுமண தம்பதிக்கு காத்திருந்த பெரும் ஆபத்து - கணவன் பலி - உயிருக்கு போராடும் மனைவி

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்பதி இலக்கான நிலையில், கணவன் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார்.



அம்பன்பொல வந்துருஸ்ஸ பிரதேசத்தில் விவசாய காணியை பாதுகாப்பதற்காக காவலுக்கு சென்ற தம்பதியை காட்டு யானை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளது.



திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில், இளம் தம்பதியினர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.



பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேனை சாகுபடியை விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக இரவில் காவலுக்கு செல்வதனை இந்த தம்பதி வழக்கமாக மேற்கொண்டு வந்துள்ளனர்.



கடந்த 8ஆம் திகதி காவலுக்கு சென்றிருந்த நிலையில், யானை ஒன்று துரத்திச் சென்று வெறுப்புணர்வைத் தணிக்கும் வகையில் தம்பதியினரைத் தாக்கியுள்ளது. அத்துடன் இளைஞனை தூக்கி காட்டு பகுதியில் வீசியுள்ளது.



பெண்ணின் முதுகு பகுதியில் காலினால் யானை மிதித்துள்ளதுடன், இரவு உணவிற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.



யானையினால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டிற்கு தகவல் வழங்கியுள்ளார்.



அதற்கமைய கணவன் - மனைவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இயந்திரத்தின் உதவியுடனேயே சுவாசிப்பதாக தெரியவந்துள்ளது.



இந்த சம்பவத்தில் 22 வயதுடைய ஷெஹதன் தெனெத் குமாரசிங்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் 20 வயதுடைய மதுஷானி ரத்நாயக்க என்ற பெண் சிகிச்சை பெற்று வருகின்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம

Oct06

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி

Jan26

72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள

Feb18

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு

Sep16

தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல

May04

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள

Oct20

ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே

Mar08

“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத

Oct06

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட

Jan18

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட

May23

மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக

Sep24

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய

Mar24

கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப

Feb16

சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (08:59 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (08:59 am )
Testing centres