சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, பெரியூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் தனலட்சுமி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, பள்ளி சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கச் சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் பள்ளி சுவரில் பெயிண்ட் அடித்துள்ளனர்.
இதை வீடியோ எடுத்தவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், உடனடியாக தலைமை ஆசிரியர் மீது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில
அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப
