பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு சூப்பரான தொடர். 3 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சின்ன பொட்டி கடை போல் தொடங்கப்பட்டது இப்போது சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது. இந்த கடையை திறக்க குடும்பமே போராடினார்கள். பின் எப்படியே எல்லோரும் இணைந்து கடையை திறந்தார்கள்.
அடுத்து தொடரில் என்ன கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் புதிய டிராக் பற்றிய ஒரு புரொமோ வந்துள்ளது.
ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் தனது மருமகனை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து எப்படியாவது தனது கடையை நிர்வாகம் செய்ய அழைத்து வர வேண்டும் என பல நாட்களாக பிளான் போட்டார், எதுவும் சரிபட்டு வரவில்லை.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் தான் கதையின் திருப்பம் அமைந்துள்ளது. ஜனார்த்தனன் போட்ட புது பிளானா இது என்பது தெரியவில்லை.
ஜனார்த்தனனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை மருத்துவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூற உடனே மூர்த்தி உங்களது கடையை ஜீவா கவனித்துக் கொள்வான் என வாக்கு கொடுக்கிறார்.
இதைக்கேட்டதும் ஜீவா அதிர்ச்சி ஆனாலும் அண்ணன் சொல்லுக்காக சரி என்கிறார்.
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர
நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன