ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. விடாமல் வெளுத்து வாங்கும் மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது கனமழை படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்காங்கே வெள்ளநீர் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சிட்னியின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளனர். மாரிக்வில்லே பகுதியில் காலையில் ஜாக்கிங் சென்ற ஹாரி ஹேய்ஸ் என்பவர் சாலையில் ஒரு வித்தியாசமான உயிரினத்தை பார்த்துள்ளார்.
இந்த உயிரினம் முட்டை வடிவில் காணப்படுகிறது. ஒரே ஒரு கண்ணும், யானைக்கு இருப்பது போல தும்பிக்கை இருந்துள்ளது.
இது பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமான உயிரினம் போல் இருந்தது. உடனே, கீழே கிடந்த இந்த உயிரினத்தை ஒரு குச்சியால் ஹாரி அசைத்துப் பார்த்தார். ஆனால், அந்த உயிரினம் அசையாமல் இருந்தது.
இதனையடுத்து, அந்த உயிரினத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஹாரி, சாலையில் கண்டேன்.. இது என்ன? என்று கேட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நிறைய பதில்கள் கொடுத்து வருகின்றனர். நிறைய பேர் இது ஏலியன்தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த உயிரினம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர
மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட
