ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. விடாமல் வெளுத்து வாங்கும் மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது கனமழை படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்காங்கே வெள்ளநீர் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சிட்னியின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளனர். மாரிக்வில்லே பகுதியில் காலையில் ஜாக்கிங் சென்ற ஹாரி ஹேய்ஸ் என்பவர் சாலையில் ஒரு வித்தியாசமான உயிரினத்தை பார்த்துள்ளார்.
இந்த உயிரினம் முட்டை வடிவில் காணப்படுகிறது. ஒரே ஒரு கண்ணும், யானைக்கு இருப்பது போல தும்பிக்கை இருந்துள்ளது.
இது பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமான உயிரினம் போல் இருந்தது. உடனே, கீழே கிடந்த இந்த உயிரினத்தை ஒரு குச்சியால் ஹாரி அசைத்துப் பார்த்தார். ஆனால், அந்த உயிரினம் அசையாமல் இருந்தது.
இதனையடுத்து, அந்த உயிரினத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஹாரி, சாலையில் கண்டேன்.. இது என்ன? என்று கேட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நிறைய பதில்கள் கொடுத்து வருகின்றனர். நிறைய பேர் இது ஏலியன்தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த உயிரினம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக
உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி
பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
