More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருவண்ணாமலையில் பரபரப்பு - பொறியியல் பட்டதாரி அடித்து கொடூரக் கொலை
திருவண்ணாமலையில் பரபரப்பு - பொறியியல் பட்டதாரி அடித்து கொடூரக் கொலை
Mar 09
திருவண்ணாமலையில் பரபரப்பு - பொறியியல் பட்டதாரி அடித்து கொடூரக் கொலை

இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருவண்ணாமலை, படேல் அப்துல் ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமது. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார்.



இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு முகமது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, நல்லவன்பாளையம் 4 வழிச்சாலையில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.



அப்போது, அந்த வழியாக வந்த முன்னா என்பவருக்கும், முகமதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு அண்ணா நகர் முதல் தெருவில் முகமது சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, முன்னா மற்றும் அவரது உறவினர்கள் முகமதுவை வழிமறித்தனர்.



அப்போது, முகமதுவுக்கும், முன்னாவிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது, முன்னா மற்றும் உறவினர்கள் முகமதுவை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்த காயமடைந்த முகமது ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.



அப்போது, முன்னாவும், அவரது உறவினர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, மயங்கி கிடந்த முகமதுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.



இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த கேமரா காட்சியில் முன்னா தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானது.



இதனிடையே, முகமதுவை தாக்கிய முன்னாவின் உறவினர்களையும் கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட

Oct06

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட

Feb23

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்

May07

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக

Apr30

இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா

Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை

Feb13

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற

Mar05

தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள

Mar11

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Jul11

தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்

May15

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர

Mar06

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப

Jul25

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:56 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:56 am )
Testing centres