கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
அனைவரும் வெவ்வேறு அறைகளில் உறங்கிய நிலையில், நிகில் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் 8 மாத குழந்தை உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர், முதற்கட்ட விசாரணையில் புகையை அனைவரும் சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் 2 மாடி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டிருந்தால், புகை வெளியேற வாய்ப்பில்லாமல் விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சி.சி.டி.வி-யை ஆய்வு செய்தபோது இரவு 1.15 மணி அளவில் தீ பிடித்ததாக தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப் காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவ இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ
