அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், அதற்கான இரண்டு துருப்புச் சீட்டுக்களை வீச தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் துருப்புச் சீட்டாக புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அரசாங்கம் ஒக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பித்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் ஆட்சி முறையில் சில மாற்றங்களை செய்யவும் வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தவிர எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பெரியளவில் நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது அரசாங்கத்தின் இரண்டாவது துரும்புச் சீட்டு.
அதன் ஊடாக அரசாங்கம் இழந்து வரும் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்று தேர்தலுக்கு செல்வது என்பது அரசாங்கத்தின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி அரச தலைவருக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி
தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந
காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
