அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்தம் 175முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் ஏற்படவுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
துறைமுகத்தில் சிக்கியுள்ள சுமார் 1,500 கொள்கலன்களின் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலுத்தப்பட வேண்டிய அமெரிக்க டொலர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தற்போது நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
எனினும் சர்வதேச கம்பனிகளுக்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறாவிட்டால் அது இலங்கை வர்த்தகர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தற்போது பருப்பு, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை சர்வதேசத்திடமிருந்து இறக்குமதி செய்கிறது.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
