ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்துக்கு அருகில், இன்று தம்பதிகளான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சுரங்கத்துக்கு அருகில் முதலில் யுவதி தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயற்சி செய்து, பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து பாய்ந்த இளைஞரும் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த இளம் தம்பதியினரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து காயமடைந்த தம்பதியினர் அதே புகையிரதத்தில் ஹப்புத்தளைக்கு கொண்டுவரப்பட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தின் கதவு பகுதியில் நின்றவாறு, மேற்படி யுவதி செல்ஃபி எடுக்க முயன்றபோது, தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ
நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
