இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச அரசு வேடிக்கை பார்க்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையிலும் ராஜபக்ச அரசு அரசியல் இலாபம் தேடுகின்றது. அதனால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்த அரசு பின்னடிக்கின்றது.
நாட்டின் நலன் கருதி - வடக்கு கரையோர மக்களின் நன்மை கருதி இந்திய அரசுடன் இது தொடர்பில் அரசு பேச்சு நடத்த வேண்டும். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் வடக்கு கடல் வளம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வடக்கு கடற்றொழிலாளர்களின் உணர்வுமிக்க போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த
