இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போகச்செய்யப்பட்ட அல்லது தாக்குதல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதிக் கோரி கவனஈர்ப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, கோட்டை தொடரூந்து நிலையத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது, குறித்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கவும். நீதியை நிலைநாட்டவும் பொதுமக்களின் ஆதரவு கோரப்பட்டது.2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட, 2000ஆம் ஆண்டு கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தின் சர்வதேச செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொழும்பின் புறநகர் அத்திட்டியவில் வைத்து கொல்லப்பட்ட சண்டே லீடர் ஸ்தாபகர் லசந்த விக்கிரமதுங்க, தாக்குதலுக்கு உள்ளான கீத் நோயர் உட்பட்ட செய்தியாளர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அத்துடன் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலும் இந்த துண்டுபிரசுரங்கள் அமைந்திருந்தன.





கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
