நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதிலும் ஒமிக்ரோன் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மதிப்பீட்டின்படி தொற்றில் 30வீத அதிகரிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவும் மாறுபாடு என்று கண்டறியப்பட்டுள்ளபோதும், அதன் பரவலை, சுகாதார முறைகளை கைக்கொள்வதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்தமுடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவே மாற்று வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறுவர்கள் மத்தியில் தொற்றுக்கள் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையின் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி 40 சிறுவர்கள் மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதில் எத்தனைப்பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, மேலும் 78பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் இதுவரை ஒமிக்ரோனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
