நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதிலும் ஒமிக்ரோன் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மதிப்பீட்டின்படி தொற்றில் 30வீத அதிகரிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவும் மாறுபாடு என்று கண்டறியப்பட்டுள்ளபோதும், அதன் பரவலை, சுகாதார முறைகளை கைக்கொள்வதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்தமுடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவே மாற்று வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறுவர்கள் மத்தியில் தொற்றுக்கள் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையின் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி 40 சிறுவர்கள் மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதில் எத்தனைப்பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, மேலும் 78பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் இதுவரை ஒமிக்ரோனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ