இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அரசாங்கத்தின் மரியாதையையும் வெகுமதியையும் பெற்றவர் தென்னிலங்கையை சேர்ந்த யுவதி யொஹானி டி சில்வா ஆவார்.
அதேசமயம் மற்ற தமிழ் யுவதி கணேஸ் இந்துகாதேவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆனால் அவருக்கு எவ்வித தடல்புடல் வரவேற்போ அல்லது வெகுமதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை . குறித்த யுவதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிறந்தவராக உள்ளார்.
இந்நிலையில் ஒருவருக்கு பாடல் பாடியதற்காக பரிசும் வீடும் வழங்கி கௌரவித்த இந்த அரசாங்கம் , நாட்டை கௌரவப்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றவருக்கு ஏன் எவ்வித மரியாதையையும் பரிசுகளையும் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளானர்.
மேலும் இருவருமே ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற நிலையில் ஒருவரை பாராட்டி கௌரவப்படுத்திய அரசாங்கம் , மற்றவரை கௌரவப்படுத்த தயக்கம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதேவேளை இதுவரையும், தங்க்கப்பதக்கம் பெற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடியவர்களோ, அல்லது அந்த துறைசார்ந்த எந்த முக்கியஸ்தர்களோ வாழ்த்துக்களை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.





முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
